ஆசிரியர் தெட்சிணா மூர்த்தி சுதர்சன் இணக்க சபை உறுப்பினராக நியமனம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் இணக்க சபைக்கான புதிய உறுப்பினராக ஆசிரியர் தெட்சிணா மூர்த்தி சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த நியமனம் நீதி அமைச்சினால் சனிக்கிழமை (01) வழங்கப்பட்டு புத்தளம் இணக்க சபையில் அவர் இணைந்து கொண்டார்.
தெட்சினா மூர்த்தி சுதர்சன் ஆசிரியர் புத்தளம் நரக்களி றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.
இவர் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மற்றும் புத்தளம் இந்து மத்திய கல்லூரிகளின் பழைய மாணவருமாவார்.

No comments