Breaking News

இரசாயன சேதனப் பசளை விவகாரம் - மஹிந்தானந்தவுக்கு கடும் தொணியில் ஜனாதிபதி உத்தரவு

நாட்டில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்துக்கு பெரும் சவாலையும் நெருக்கடியையும் கொடுத்து வருகின்ற இரசாயன சேதனப் பசளை விவகாரம் தொடர்பில் விவசாய அபிவிருத்தித் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் தொனியில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாட்டின் விவசாய கமத் தொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளை குறிப்பாக பசளைப் பிரச்சினை தொடர்பில் சுயாதீனமாக செயற்படுவதற்கு விவசாய அமைச்சின் செயலாளரை மாற்றுமாறு வேண்டியதற்கு இணங்க அவரை இடமாற்றம் செய்ததுடன் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு தேவைப்பட்ட செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார் எனினும் இவ்விடயத்தில் இதுவரை ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என ஜனாதிபதியால் அமைச்சர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.


விவசாயத்துறை பசளைப்  பிரச்சினைகள் தொடர்பில் சகல குற்றச் சாட்டுகளும் ஜனாதிபதியை நேரடியாக தாக்குவதால் இப்பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காணுமாறும் முடியாவிட்டால் கசப்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி வரும் எனவும் அமைச்சர் கடுமையான தொணியில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






No comments