தென் கடலில் காயமடைந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர உதவிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கொழும்பில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் (MRCC) ஒருங்கிணைந்து, கடற்படையானது, சனிக்கிழமை (25) ஊனமுற்ற மீனவர் ஒருவரை கடற்படைக் கப்பல் மூலம் அவசரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பியது.
‘ஹசிது புதா 4’ (IMUL-A-0808 GLE) என்ற பல நாள் மீன்பிடிக் படகு, இலங்கைக்குத் தெற்கே நாற்பத்தைந்து (45) கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு இருந்த மீனவர் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதன்படி, மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படைக்குத் தேவையான உதவியை வழங்குமாறு, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம், கொழும்பு கடற்படைத் தளத்தில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்ததுடன், கடற்படை உடனடியாகப் பதிலளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர, தெற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பலை அப்பகுதிக்கு அனுப்பியது.
பின்னர் கடற்படையினர், உடல் ஊனமுற்ற அந்த மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து, அவரை விரைவாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து, மேலதிக சிகிச்சைக்காக 2026 ஏப்ரல் 25 அன்று ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொழும்பு கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், இலங்கை கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.





No comments