கப்பல் உரிமையாளர்கள் மற்றும் இயக்குபவர்களுக்கு கடல்வழிப் போக்குவரத்து பயிற்சி வழங்கிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையானது, பாதுகாப்பான மற்றும் திறமையான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில், கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து, பயணிகள் படகு உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்காக வெள்ளிக்கிழமை (2026 ஏப்ரல் 17) யாழ்ப்பாணம், குரிக்கட்டுவான் இறங்குத் துறையில் ஓர் விழிப்புணர்வூட்டும் அமர்வை வெற்றிகரமாக நடத்தியது.
இந்தப் அமர்வின் போது, பயணிகள் போக்குவரத்து தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்கள், பயணிகளின் பாதுகாப்பான ஏற்றம் மற்றும் இறக்கம், மேலாண்மை, தீயணைப்பு முறைகள் மற்றும் தீ தடுப்பு ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் பங்கேற்பாளர்களுக்கு செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டதுடன், இலங்கைக் கடற்படையானது இதுபோன்ற
விழிப்புணர்வுத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி, கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளின் பாதுகாப்பையும் தரத்தையும் மேலும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.







No comments