அமைதியான நடைபயணம் மூன்றாவது நாள் ஆரம்ப நிகழ்வில் பிரதமர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
உலக அமைதியை பிரார்த்திக்கும் வகையில் "அமைதிக்கான நடைப்பயணம்" எனும் பொருளில் அமெரிக்காவில் 110 நாட்களாக மேற்கொண்ட நடைப்பயணத்திற்குத் தலைமை வகித்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இலங்கைக்கு வருகை தந்து, தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை செல்வதற்காக அவர்கள் ஆரம்பித்த அமைதி நடைப்பயணத்தின் மூன்றாவது நாளான (ஏப்ரல் 24) ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து நடைப்பயணம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்
நடைப்பயணத்தின் மூன்றாவது நாள் மாவனல்ல பெலிகம்மன வித்தியாவர்த்தன பிரிவேனா போத்குல் விகாரையில் நிறைவு பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.








No comments