அனுராதபுரம் திசாவெவவில் மூழ்கிய ஒருவர் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவால் காப்பாற்றப்பட்டார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அனுராதபுரம் திசாவெவவில் சனிக்கிழமை (18) நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நபரொருவர் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments