மாதம்பை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்களுக்காக புதிய மாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
எம்.யூ.எம்.சனூன்
மாதம்பை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிய இடப்பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில், தரம் 6 மாணவர்களுக்காக புதிய மாடிக் கட்டடம் அண்மையில் (24) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் எஸ். எல்.அன்வர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம், மெஸ்டா சங்க உறுப்பினர்கள், மிக்ஸ்ட் குழு உறுப்பினர்கள், தரம் 6 பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.




No comments