கற்பிட்டி தில்லையடியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1030 கிலோ உலர்ந்த மஞ்சளை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை புதன்கிழமை (22) நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.
கற்பிட்டி தில்லையடி கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தாறு (26) சந்தேகத்திற்கிடமான பைகள் காணப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும், பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து முப்பத்தெட்டு (1038) கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்பை கடற்படை கைப்பற்றியது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் இருப்பு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கற்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.


No comments