Breaking News

.திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.


அதன்படி, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கோகண்ணா நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஐந்து (05) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன, மேலும் சுமார் 30 லிட்டர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.  


மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, மணலை ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments