எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் வழமை போன்று இவ்வருடமும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை சனிக்கிழமை காலை (22) புத்தளம் காசிமிய்யா அரபு கலாசாலையில் நடைபெற்றது.
இந்த நேர்முகப்பரீட்சையின் போது புத்தளம், அனுராதபுரம், பொலநறுவை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டினை புத்தளம் வை.எம்.எம்.ஏ.அமைப்பின் தலைவர் ஹிஜாஸ் மரைக்கார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.






