சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் சுதந்திர தினம் அனுஷ்டிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது ஆண்டு சுதந்திர சுதந்திர தினம் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (04) அனுஷ்டிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் உட்பட்ட ஆசிரியர் குழாத்தினால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விfல் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments