உடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல்
(க.மகாதேவன்-உடப்பு)
உடப்பு கிராமத்தின் வருடாந்த தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் (4)இடம்பெற்றது.
இதன் போது,மரு (கும்பம்) மரபிசை சகிதம் சுமந்து வருதல், அத்துடன் மூலஸ்தான விஷேட பூஜைகள் இடம்பெற்று ,தூப தீபம் காட்டப்பட்டு, விபூதி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.அத்தோடு ஆலய முன்றலில் பொங்கல் இடம்பெற்றது.
ஆலயத்தின் பூஜைகளை சிவஶ்ரீ குமார பஞ்சாட்சர சிவாச்சாரியார் ஆரம்பித்து வைத்தார்.
No comments