மதுரங்குளியில் - முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் கொழும்பு - புத்தளம் பிரதான வீதியை மரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒரு புறமும் அனுராதபரம், புத்தளத்தாலிருந்து கொழும்பு நோக்கி வந்த வாகனங்கள் மறுபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு காணப்படுகின்றன பொலிசார் சமரசத்தில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை தொடர்ந்தும் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
மேலும் அவ்விடத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.






