JobVibe.lk - Sri Lanka Job Portal

சிறுபான்மை அரசியல் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் - மு.மா.ச.உறுப்பினர் எஸ்.ஏ.எஹியா

சிறுபான்மை அரசியல் தலைமைகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அரசியல் தலைமைகள் எல்லோரும் கைகோர்க்கும் நேரம் இதுவே....!
ஏன் என்றால் நாமலே உருவாக்கிய இந்த ஜனாபதியும் பிரதமரும் நியாயமாக நடந்து கொள்கிறார்களா...? என்ற சந்தேகம் எம்மிடத்தில் உருவாகி உள்ளது...!

21திகதி நடந்து முடிந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் எமது மக்களுக்கு எந்த பாதுகாப்பும் தராத சூழ் நிலையில் எந்த ஒரு தவறும் செய்யாத ஆளுமை மிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளை பாதுகாப்பு தரப்பால் எந்த குற்றமும் சுமத்தப்படாத அதில் எந்த சம்பந்தமும் இல்லாத இந்த அரசியல் தலைமைகள் மூவரையும் பதவி விலக வேண்டும் என்று ஆங்காங்கே இனவாத தேரர்கள் வீனற்ற களத்தில் ஈடுபட்டு எங்களது முழு முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் கேவலப்படுத்துவது   கூச்சப்படுத்துவது மாத்திரம் இல்லாமல் நாட்டின் பாரிய இணக்கலவரத்தை தூண்டும் பாரிய முயற்சிக்கானதே இக்காலம்...!

அவ்வாறன சூழ்நிலையில் அவர்களை உடனடியாக கைது செய்து இந்த பிரச்சினை தீர்ப்பதை தவிர  எங்களது முஸ்லிம் அரசியல் தலைமைகளை பதவி விலக சொல்வதோ அல்லது அவர்களை நீக்குவதிலோ எந்த நியாயங்களும் இல்லை...!

இவ்வாறான கடும் நிலையில் எங்களது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த மூன்று அரசியல் பிரதிநிகளை பதவி நீக்கினால் உடனடியாக அனைத்து உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்...!

பிரதமரையும் ஜனாதிபதியையும் நாங்கள் உறுவாக்கி உள்ளோம் இந்த விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வில்லை என்றால் நாங்கள் அனைவரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று சவால் விட வேண்டும்...!

எதிர்கால முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்யும் பாரிய அற்பனிப்பு இதுவே தவிர வேறு எதுவும் இல்லை என்பதே உண்மை...!

இந்த விடயத்தில் தாமதமாகாமல் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் இந்த விடயத்தில் ஒற்றுமைப்பட்டு  செயல் பட வேண்டும்...!

இது முழுக்க முழுக்க முஸ்லிம் சமுதாயத்தை அடிமையாக்கி முடக்கி ஆள்வதற்கான இனவாத சதி இதற்கு நாம் வழி வகுக்க முடியாது...!
 அல்லாஹ்வுக்காக கட்சி நிறம் சுயநலம் பாராமல் எங்களின் சமுதாயத்தை பார்த்து ஒற்றுமைப்பட்டு செயல் படும் தருணம்...!
 கடும் அவசியமான நேரம்...!
இன்ஷா அல்லாஹ் இந்த விடயத்தில் கட்டாயமாக ஒற்றுமையை வெளிக்காட்டுங்கள்..!

இப்படிக்கு
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
ஆப்தீன் எஹியா

Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال