புத்தளம் மாநகர சபை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவித்த மேயர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாநகர சபையின் சார்பில் மாநகர முதல்வர் ரின்சாத் அஹமட் முன்னெடுப்பில் மாநகர சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று புத்தளம் மாநகர சபையில் இடமபெற்றது.
புத்தளம் மாநகர சபையின் ஒழுங்கையும் பொதுமக்களின் நலனையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் பாராட்டப்பட்டதுடன் அவர்களின் கடமைகளை தொடர்ந்தும் நேர்மையாகவும் பொறுப்புடனும் மேற்கொள்ளுமாறு ஊக்குவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
மேலும் அவர்களுக்கான புதிய சீருடைகளும் இதன் போது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






No comments