உலக யுத்தத்துக்கு எதிராக களுத்துறை மதுகம அறநெறி மற்றும் மறை பாடசாலையின் மலையக சிறுவர்கள் களத்தில்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
எமது எதிர்காலம் அமைதியின் மடியில் மலர வேண்டும்.நாங்கள் பாடல்களைப் பாட விரும்புகிறோம்; யுத்தக் குண்டுகளின் சத்தங்களை அல்ல. அமைதியே எங்கள் விளையாட்டு; போர் எங்கள் பயம். எங்களுக்கு புத்தகங்கள் போதும்; துப்பாக்கிகள் தேவையில்லை. எங்களுக்கு நண்பர்கள் போதும்; எதிரிகள் தேவையில்லை.
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்ப நடாத்திய மத நல்லிணக்கப் பயிற்சியில் கலந்து கொண்ட களுத்துறை மாவட்டம் மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த அறநெறி மற்றும் மறைப் பாடசாலை மாணவர்கள், இவ்வாறு தங்கள் குரலை ஒன்றிணைத்து, தற்போது நடைபெற்று வரும் யுத்தத்துக்கு எதிரான தங்களது சிந்தனைகளையும் அமைதிக்கான ஆழமான விருப்பத்தையும் வெளிப்படுத்தினர்.






No comments