Breaking News

கற்பிட்டி வன்னிமுந்தல் கடற்பரப்யில் இறந்த நிலையில் காணப்பட்ட 400 கிலோ எடை கொண்ட ஆவ்லிய்யா மீன்

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி வன்னிமுந்தல் கடற்பரப்யில் 400 கிலோ எடை கொண்ட ஆவ்லியா  மீன் ஒன்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் இறந்த நிலையில் கடலில் மிதந்துள்ளது இதனை அவதானித்த சுற்றுலா குழுவினரால் கற்பிட்டி நாரா நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டது


கற்பிட்டி நாரா நிறுவனத்தின் அதிகாரிகளின் பணிப்பின் பெயரில் வன்னிமுந்தல் மீனவர்களின் உதவியுடன் கற்பிட்டி வன்னமுந்தல் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.


சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் மேற்கொண்ட நாரா நிறுவன அதிகாரிகள் உடனடியாக கற்பிட்டி கண்டக்குழி குடாவில் அமைந்துள்ள வன ஜீவிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்ததை அடுத்து வனஜீவிகள் திணைக்களத்தின் அதிகாரிகளால் மருத்துவ பரிசோதனைக்காக ஆவ்லிய்யா மீன் மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.




No comments