(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கட்டுரை போட்டியில் புத்தளம் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி மொஹமட் முஸாதீக் பாத்திமா அஸ்கா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவருக்கான பரிசளிப்பு வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


