அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிலாபம் கல்வி வலயத்திற்குட்பட்ட நஸ்ரியா மத்திய கல்லூரி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிளும் பரீட்சைக்கு தோற்றி தமிழ் மொழி மூலத்தில் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய 83 மாணவர்களுள் 60 மாணவர்கள் உயர் தரம் கற்க தகுதியைப் பெற்று 72.29% சத வீதப் சித்தியைப் பெற்றுள்ளதாக பிரதி அதிபர் ஏ.எம். அனூஸ் தெரிவித்தார்.


