திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மகிந்த சுவாமி தரிசனம்
(க.கிஷாந்தன்)
இந்தியா சென்றுள்ளபிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தினர் இன்று (24.12.2021)திருப்பதி ஏழுமலையான்கோவிலில் சாமி தரிசனம்செய்துள்ளார்.
நேற்று சென்ற பிரதமர்மகிந்த ராஜபக்சதிருமலையில் உள்ளபத்மாவதி விருந்தினர்மாளிகையில் இரவுதங்கினார்.
அதனையடுத்து, இன்றுகாலை சுவாமி தரிசனம்செய்தார். முன்னதாககோவில் நுழைவாயிலில்தேவஸ்தான செயல்அலுவலர் ஜபகர் ரெட்டி,அர்ச்சகர்கள்மரியாதையுடன் மகிந்தராஜபக்சவைகோவிலுக்குள்அழைத்துச் சென்றுசுவாமி தரிசனம் செய்துவைத்தனர்.
சுவாமி தரிசனத்திற்குபிறகு மகிந்த ராஜபக்சபின்னர் தங்க கொடிமரத்தை தொட்டுவணங்கி தரிசனம்செய்தார். இதையடுத்துரங்கநாதர் மண்டபத்தில்வேத பண்டிதர்கள் வேதஆசிர்வாதம் செய்துவைக்க தேவஸ்தானஅதிகாரிகள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.
மேலும் அடுத்த வருடத்திற்கான டைரி, காலண்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்று (24.12.2021) மாலை வரை திருமலையில் தங்கும் அவர் ஐந்து மணிக்கு மேல் புறப்பட்டு இலங்கை வருவார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments