தகவல் தொழில் நுட்ப வசதிகள் மூலமாகவும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் அநாகரிக ஆபாச தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நீதியமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள யோசனைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
இதேவேளை இவ்விடயம் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கும் மற்றும் பாராளுமன்ற அனுமதிகளுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
