2022 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய 42066 பில்லியன் ரூபாய்களை 2022 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இத்திட்டத்திற்கிணங்க நாட்டிலுள்ள 16022 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் ஒரு பிரிவுக்கு மூன்று மில்லியன் ரூபாய்கள் அடிப்படையில் நிதி ஒதுக்கிட படவுள்ளது
மேற்படி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த தகவல்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
