ஜனாதிபதி வேட்பாளராக றவூப் ஹக்கீம் - நஸீர் அஹமட் ஆலோசனை
எஸ்.ரி.அக்ஷயா
எதிர்வருகின்ற ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடப்போகின்ற எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50 சத விகித வாக்கைப் பெறப்போவதில்லை என அறுதியிட்டுக் கூற முடியுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித்தேர்தலில் இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் அவர் ஆலோசனையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை (20.08.2019) வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுபான்மை மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போன்றதென்பது உறுதியான விடயம். எனவே, இலங்கை முஸ்லிம் சமூகம் தமது ஜனநாயக வாக்குப்பலம் எத்தகையது என்பதைக் வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்தி அவருக்கு ஒட்டுமொத்தமாக தமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும்.
இரண்டாவது வாக்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உத்தரவாதமளிக்கும் வேறொரு வேட்பாளருக்கு வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கையே சமகால அரசியல் போக்கில் முஸ்லிம்களுக்கு சிறந்த பெறுபேற்றைத்தரும்.
எமது அபிலாஷைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைச் சரிவரப்புரிந்து ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உறுதியான முறையில் உத்தரவாதமளிக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு நாம் ஆதரவளிப்பது முக்கியமானது.
அதன் மூலம் எமது ஒட்டுமொத்த, ஒன்றித்த சக்தி எத்தகையதென்பதை நாம் தேசியத்துக்கும் சர்வதேசத்துக்கும நிரூபித்துக்காட்ட வேண்டியதும் அவசியமுள்ளது. சமகால அரசியல் நிலையில், ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிக முக்கிய வகிபாகம் பெறுகின்றன.
ஆகையினால், தமிழ் சமூகமும் இது பற்றிச்சிந்தித்துச் செயலாற்றினால், அதுவும் வரப்போகின்ற ஜனாதிபதித்தேர்தலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும். முஸ்லிம் மக்கள் தமது ஒட்டு மொத்தமான 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை எவ்வாறு அளிக்கப்போகின்றார்கள் என்பது முக்கியமானது.
முஸ்லிம் சமூகம் இந்தப்பொறுப்பை சரிவர உணர்ந்து தமது பங்களிப்பைச் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. சமூகத்துக்கான ஒரு வேட்பாளரை முஸ்லிம்கள் களமிறக்க வேண்டும். அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் இதில் களமிறங்குவாரானால் அது சிறப்பாக இருக்கும்.
கடந்த காலங்களில் நம்பிக்கையின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள், உத்தரவாதங்கள், ஒன்றிணைந்த பங்களிப்புகள் அனைத்தும் முஸ்லிம்களைப் பெறுத்த வரையில் பாதகங்களையும் ஏமாற்றங்களையுமே ஏற்படுத்தின.
சமூகத்துக்கு நம்மையளிக்கும் விடயங்கள் எதுவுமே நடக்கவில்லை. ஒரு அங்குலமளவு காணியைக்கூட விடுவிக்க முடியாத நிலையும், சாதாரண அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையுமே காணப்பட்டது.
இனியும் அதன் வழி நடப்பதற்கு நாம் முயற்சிக்கக்கூடாது. முஸ்லிம்கள் கோழைகளல்லர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் நாம் எமது அரசில் பாதையை வகுக்க வேண்டும். எனவே, ஜனாதிபதி வேட்பாளரான முஸ்லிம் ஒருவருக்கு எமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும். பின்னர் எமது கோரிக்கைளை ஏற்றுக்கொண்டு, அதனைச்செயற்படுத்துவதாக உத்தரவாதமளிக்கின்ற வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை அளிக்க வேண்டும். காரணம் முஸ்லிம் வேட்பாளர் பெற்றுக்கொண்ட அத்தனை வாக்குகளும் மற்றைய வேட்பாளருக்கும் கிடைக்கப்பெற்றதையும் இந்த வாக்குகள் மூலமாகத்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதையும் உறுதி செய்ய வேண்டியதும் அவசிமானது” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வருகின்ற ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடப்போகின்ற எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50 சத விகித வாக்கைப் பெறப்போவதில்லை என அறுதியிட்டுக் கூற முடியுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித்தேர்தலில் இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் அவர் ஆலோசனையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை (20.08.2019) வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுபான்மை மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போன்றதென்பது உறுதியான விடயம். எனவே, இலங்கை முஸ்லிம் சமூகம் தமது ஜனநாயக வாக்குப்பலம் எத்தகையது என்பதைக் வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்தி அவருக்கு ஒட்டுமொத்தமாக தமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும்.
இரண்டாவது வாக்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உத்தரவாதமளிக்கும் வேறொரு வேட்பாளருக்கு வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கையே சமகால அரசியல் போக்கில் முஸ்லிம்களுக்கு சிறந்த பெறுபேற்றைத்தரும்.
எமது அபிலாஷைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைச் சரிவரப்புரிந்து ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உறுதியான முறையில் உத்தரவாதமளிக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு நாம் ஆதரவளிப்பது முக்கியமானது.
அதன் மூலம் எமது ஒட்டுமொத்த, ஒன்றித்த சக்தி எத்தகையதென்பதை நாம் தேசியத்துக்கும் சர்வதேசத்துக்கும நிரூபித்துக்காட்ட வேண்டியதும் அவசியமுள்ளது. சமகால அரசியல் நிலையில், ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிக முக்கிய வகிபாகம் பெறுகின்றன.
ஆகையினால், தமிழ் சமூகமும் இது பற்றிச்சிந்தித்துச் செயலாற்றினால், அதுவும் வரப்போகின்ற ஜனாதிபதித்தேர்தலில் ஒரு திருப்பு முனையாக இருக்கும். முஸ்லிம் மக்கள் தமது ஒட்டு மொத்தமான 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை எவ்வாறு அளிக்கப்போகின்றார்கள் என்பது முக்கியமானது.
முஸ்லிம் சமூகம் இந்தப்பொறுப்பை சரிவர உணர்ந்து தமது பங்களிப்பைச் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. சமூகத்துக்கான ஒரு வேட்பாளரை முஸ்லிம்கள் களமிறக்க வேண்டும். அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் இதில் களமிறங்குவாரானால் அது சிறப்பாக இருக்கும்.
கடந்த காலங்களில் நம்பிக்கையின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள், உத்தரவாதங்கள், ஒன்றிணைந்த பங்களிப்புகள் அனைத்தும் முஸ்லிம்களைப் பெறுத்த வரையில் பாதகங்களையும் ஏமாற்றங்களையுமே ஏற்படுத்தின.
சமூகத்துக்கு நம்மையளிக்கும் விடயங்கள் எதுவுமே நடக்கவில்லை. ஒரு அங்குலமளவு காணியைக்கூட விடுவிக்க முடியாத நிலையும், சாதாரண அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையுமே காணப்பட்டது.
இனியும் அதன் வழி நடப்பதற்கு நாம் முயற்சிக்கக்கூடாது. முஸ்லிம்கள் கோழைகளல்லர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் நாம் எமது அரசில் பாதையை வகுக்க வேண்டும். எனவே, ஜனாதிபதி வேட்பாளரான முஸ்லிம் ஒருவருக்கு எமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும். பின்னர் எமது கோரிக்கைளை ஏற்றுக்கொண்டு, அதனைச்செயற்படுத்துவதாக உத்தரவாதமளிக்கின்ற வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை அளிக்க வேண்டும். காரணம் முஸ்லிம் வேட்பாளர் பெற்றுக்கொண்ட அத்தனை வாக்குகளும் மற்றைய வேட்பாளருக்கும் கிடைக்கப்பெற்றதையும் இந்த வாக்குகள் மூலமாகத்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதையும் உறுதி செய்ய வேண்டியதும் அவசிமானது” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments