இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", இலங்கையிலிருந்து புறப்பட்டது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வியாழக்கிழமை (21) இலங்கையை வந்தடைந்துடன், அத்தேவைகளை நிறைவேற்றிய பின்னர் வெள்ளிக்கிழமை (2026 மே 22) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
இலங்கை கடற்படையானது, கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் “ITS GIOVANNI DELLE BANDE NERE” கப்பலுக்கு கடற்படை வழியனுப்பு விழாவை நடத்தியது.
இலங்கையை வந்தடைந்த 'ITS GIOVANNI DELLE BANDE NERE' என்ற கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் Antonio BUFIS, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் ஒரு அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது.












No comments