சிலாபம் வைத்தியசாலையில் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார்.
அத்துடன் வியாழக்கிழமை இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பகுதியின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சிலாபம் பிரதான வீதியின் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments