JobVibe.lk - Sri Lanka Job Portal

அத்தம’ தேசிய துப்பரவு தின நிகழ்ச்சித் திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ தேசியத் திட்டத்தின் மூலம் 'தூய்மையான தேசத்திற்கான தேசிய குடிமக்கள் பணி' என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை (08 ஆகஸ்ட் 2026) கடற்படையினரால் இலங்கை முழுவதும் தொடர் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.   

இந்தத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில், ராகம போதனா மருத்துவமனை வளாகம், நாரஹேன்பிட்டவில் உள்ள ஆண்டர்சன் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம், முண்டலம பிரதேச செயலக வளாகம், வனாத்தவில்லுவ சிறுவர் பூங்கா, சிலாவத்துறை பிரதேச மருத்துவமனை வளாகம், மன்னார் மாவட்ட மருத்துவமனை வளாகம் மற்றும் பிரதேச செயலக வளாகம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் அடங்கியிருந்தன.  

மேலும், மட்டக்களப்பு கிரான் இராமகிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை வளாகம், கதிரவேலி கடற்கரை, திரியாய் கிராமிய வைத்தியசாலை வளாகம், முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வளாகம், யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதி, அத்துடன் வெத்தலக்கேணி, மாதகல்துறை மற்றும் கீரிமலை கடற்கரைப் பிராந்தியங்களும் இந்த நிகழ்ச்சிகளின் கீழ் சுத்தம் செய்யப்பட்டன.

இந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சியின் மூலம், குறித்த பிரதேசங்களில் சேர்ந்திருந்த பொலித்தீன், காகிதங்கள் உள்ளிட்ட திடக்கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் என்பன முறையாக அகற்றப்பட்டதுடன், அக்கெழிவுப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பிரிக்கப்பட்டு, முறையான நடைமுறைகளின்படி அகற்றுவதற்கும் கடற்படையினரால் சமூகப் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال