JobVibe.lk - Sri Lanka Job Portal

கடற்படை மரியாதையுடன் ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையில் 33 வருடங்களுக்கும் மேலான சேவைக்காலத்தை நிறைவு செய்து, ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய இன்று (2026 ஜூலை 28) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரியவுக்கு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையிலான கடற்படை மேலாண்மை வாரியம் கடற்படைத் தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கடற்படை பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சக அதிகாரிகளிடம் விடைபெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்பட்ட போது, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரியவுக்கு கடற்படை பாரம்பரிய முறைப்படி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

1992 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10 வது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் கோசல வர்ணசூரிய, தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவைக் காலத்தில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் கட்டளையதிகாரியாகவும், கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன், அவர் கடற்படை ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் கடற்படை ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரி, நீரியல் அளவையியல் செயல்பாடுகளின் பணிப்பாளர், ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர், தெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி, கடற்படை நீரியல் அளவையியல் தலைவர், தேசிய நீரியல் அளவையியலாளர் மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதி போன்ற முக்கிய பதவிகளை வகித்த இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال