JobVibe.lk - Sri Lanka Job Portal

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், பத்தரமுல்ல பகுதியில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

குருநாகல் பேருந்து நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரதி மேயர் இந்த இலஞ்சத்தைக் கோரியதாகக் கூறப்படுகிறது.


சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அவர் 3 மில்லியன் ரூபாயும், மாதம் 5 லட்சம் ரூபாயும் கோரியிருந்த நிலையில், 3 மில்லியன் ரூபாயைப் பெறச் சென்றபோது பிரதி மேயர் கைது செய்யப்பட்டார்.


சந்தேகத்திற்குரிய பிரதி மேயர் சனிக்கிழமை (09) அலுத்கடே நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் குருநாகல் மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி மேயராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post

نموذج الاتصال