Breaking News

தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர உதவிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒரு கடற்படைப் படகு மூலம் அவசரமாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காகக் கடற்படையால் வெள்ளிக்கிழமை ( 2026 மே 08) அனுப்பப்பட்டார்.


இலங்கைக்குத் தெற்கே சுமார் எண்பத்தி ஒன்று (81) கடல் மைல் தொலைவில், காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏழு (07) மீனவர்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் விபத்துக்குள்ளானதுடன், சிகிச்சைக்காக மீனவரைக் கரைக்குக் கொண்டுவரத் தேவையான கடற்படை உதவியை வழங்குமாறு னகொழும்பில் உள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு னமையத்திற்கு அறிவிப்பு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல நாள் றமீன்பிடிக் கப்பலில் சிக்கியிருந்த மீனவருக்கு உதவுமாறு கடல் பகுதி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு அந்த மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, சிக்கியிருந்த மீனவரைப் பாதுகாப்பாகக் கப்பலுக்குக் கொண்டுவருவதற்காக ‘‘MT MAUI’ என்ற வர்த்தகக் கப்பல் அனுப்பப்பட்டதுடன், தெற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பல், மீனவரை மேலதிக சிகிச்சைக்காகக் கரைக்கு அழைத்து வருவதற்காக வெள்ளிக்கிழமை (2026  மே 08 )அந்த வர்த்தகக் கப்பலுக்கு அனுப்பப்பட்டது. 


அதன்படி, காயமடைந்த மீனவரைக் கடற்படைக் கப்பலுக்குக் கொண்டு சென்ற பின்னர், கடற்படையினர் அவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து, விரைவாகக் காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மேலதிக சிகிச்சைக்காகக் காலி தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும், கொழும்பு கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், இலங்கை கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.













No comments