Breaking News

இஷாம் மரிக்காரின் நூர் நகர் போராட்டம் வெற்றி, ரயில் சேவை ஆரம்பம்

நூர் நகர் ரயில் நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மக்கள் சேவையை மீண்டும் தொடங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தூய தேசத்திற்கான கட்சியின் மக்கள் போராட்டம் வெற்றியடைந்துள்ளது.


சமீபத்தில், நூர் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது என்பதை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று Clean Nation கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களால் வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.


இதனைத் தொடர்ந்து, Clean Nation கட்சி பொதுமக்களுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. பொதுமக்களிடமிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன், நேற்று மாநகர சபை கூட்டத்திலும் இந்த பிரச்சினை தொடர்பாக தீர்மானங்களும் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.


இந்த தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக, புதன்கிழமை(08) காலை 9:30 மணிக்கு நூர் நகர் நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.


நீண்ட காலமாக இந்த சேவைக்காக போராடி வந்த பகுதி மக்கள் இன்று ரயில் நிலையத்தில் திரண்டு, இஷாம் மரிக்காரை வரவேற்று அவரின் சேவைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். “மக்களுடன் நின்று, துணிச்சலாக நீதி பெற்றுத் தந்த ஒரே அரசியல்வாதி இவர் தான்” என்று அவர்கள் உணர்ச்சியுடன் குழந்தைகளோடு வந்து தெரிவித்தனர்.


இந்த வெற்றி, சரியான தலைமையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை மற்றும் உறுதியான போராட்டத்தின் சக்தியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.








No comments