JobVibe.lk - Sri Lanka Job Portal

கம்பஹாவின் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ஹரிணி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சிங்கள, தமிழ் புத்தாண்டுச் சம்பிரதாயச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பஹாவிலுள்ள திரு. தர்ஷன வீரசிங்கவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.


இதன்போது, வீட்டு உரிமையாளர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர், புத்தாண்டுச் சடங்குகளிலும் இணைந்துகொண்டார். குறிப்பாக, 'வேலை ஆரம்பிப்பதற்கான' சுபவேளையில் வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டதுடன், குழந்தைகளுக்கு 'ஏடு தொடக்கும்' நிகழ்வையும் அவர் ஆரம்பித்துவைத்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டு விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் அவ்வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டி வைத்து, இச் சுப நேரச் சடங்குகளில் பிரதமருடன் இணைந்துகொண்டார்கள்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال