புத்தளம் எலுவன்குளம் ஆற்றில் நிரம்பி வழியும் மக்கள் வெள்ளம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக புத்தளம் மற்றும் அதனை அண்மித்த பகுதி மக்கள் தாங்க முடியாத வெப்பத்தினை போக்கும் முகமாக குடும்பங்கள் சகிதம் மற்றும் நண்பர்கள் கூட்டம் கூட்டமாக புத்தாண்டு விடுமுறையை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் சமைத்து உண்டு ஆற்றில் நீராடுவதற்காக புத்தளம் எலுவன்குளம் ஆற்றில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும் காட்சியினை காணக்கூடியதாக உள்ளது.
மேலும் புத்தளம் எலுவன்குளம் ஆற்றின் நீர் மட்டத்தையும் கவனத்தில் கொண்டு மக்கள் நீராடுவதுடன் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் குடும்பமாக வருபவர்கள் சிறுவர்கள் விடயத்தில் கூடிய அக்கரை செலுத்துமாறும் வேண்டிக் கொள்ள படுகின்றனர்.







No comments