Breaking News

ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே, Manual Treadmill இல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி, கின்னஸ் உலக சாதனை படைக்கத் தகுதி பெற்றுள்ளார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு), Manual Treadmill இல் தொடர்ச்சியாக ஓடி மூன்று (03) கின்னஸ் உலக சாதனைகளைப் படைக்கும் தனது பயணத்தை வெள்ளிக்கிழமை (2026 மார்ச் 20) தொடங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை (2026 மார்ச் 22), அவர் 48 மணிநேர தொடர்ச்சியான ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைக்கத் தகுதி பெற்றார். அதற்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை தேவையான வசதிகளை வழங்கியது.


அதன்படி, அவர் 12 மணி நேரத்தில் 100.36 கிலோமீட்டர் தொடர்ச்சியாக  Manual Treadmill இல் ஓடி, தனது முந்தைய கின்னஸ் உலக சாதனையான 94.30 கிலோமீட்டரை 12 மணி நேரத்தில் முறியடித்து, முதல் (01) கின்னஸ் உலக சாதனைக்குத் தகுதி பெற்றார்.


தனது இரண்டாவது (02) கின்னஸ் உலக சாதனைக்குத் தகுதிபெற்ற அவர், 24 மணி நேரத்தில் 188.13 கிலோமீட்டர் என்ற முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்து, Manual Treadmill இல் 24 மணி நேரத்தில் 190.55 கிலோமீட்டர் ஓடினார்.


தாய்நாட்டிற்கு ஒரு தனித்துவமான சாதனையாகவும், சர்வதேச சமூகத்தின் முன் கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் பெருமையைக் கொண்டு வந்த வகையிலும், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே ஞாயிற்றுக்கிழமை காலை (2026 மார்ச் 22) 10:00 மணிக்கு, Manual Treadmill இல் 48 மணி நேரத்தில் 316.7 கிலோமீட்டர் தூரம் ஓடி, புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கத் தகுதி பெற்றார்.


இந்த கின்னஸ் உலக சாதனைகளுடன், மேலும் மூன்று சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவையாவன: Manual Treadmill இல் 11 மணி 57 நிமிடம் 18 வினாடிகளில் அதிவேக 100 கி.மீ., 20 மணி 7 நிமிடம் 42 வினாடிகளில் அதிவேக 100 மைல்கள், மற்றும் 44 மணி 40 நிமிடம் 24 வினாடிகளில் அதிவேக 300 கி.மீ. நடைப்பயணம். இந்தச் சாதனைகளும் எதிர்காலத்தில் கின்னஸ் உலக சாதனைகளாகக் கருதப்பட முன்மொழியப்பட்டுள்ளன.


கடற்படையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரியான ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லீனகே, மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைக்கத் தகுதி பெற்றதுடன், இலங்கை இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மதிப்புமிக்க முன்மாதிரியை அமைக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதன் மூலம் அவர் இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழையும் பெருமையையும் கொண்டு வந்தார்; அதாவது, உறுதி, முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தளராத தைரியத்துடன் எந்தவொரு சவாலையும் வெல்ல முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்தார்.









No comments