Breaking News

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல்

நூருல் ஹுதா உமர் 

வடமத்திய மாகாணத்தில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு எளிதில் செல்ல உதவும் நோக்கில் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.


வடமத்திய மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க, Qatar Charity அமைப்பினால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தொலைதூரப் பகுதிகளில் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இச்சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க, பொதுமக்கள் தொடர்பு அலுவலர் அசேல விஜேசிங்க, Qatar Charity அமைப்பின் இலங்கை பிரதிநிதி மற்றும் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வு, பொருளாதார வசதிகள் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவுவதோடு, சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மனிதநேய நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.











No comments