புத்தளம் பாலாவியில் ஒரு பகுதிக்கான மின்சாரம் மூன்று நாட்களாக தடைப்பட்டுள்ளது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் பாலாவியில் ஒரு பகுதிக்கான மின்சாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) முதல் தடைப்பட்டுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை (10) வரை இது சீர் செய்யப்படாது காணப்படுவதாகவும் சுட்டிக் காட்டும் இப் பகுதி வாழ் மக்கள் இதன் காரணமாக இந்த ரமழான் மாதத்தில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்
மேலும் இந்த பகுதியிலேயே முக்கியமான வர்த்தக நிலையங்கள், பார்மசி, பள்ளிவாசல் என்பனவும் காணப்படுகின்றது. இந்த மின் தடை பற்றி புத்தளம் மின்சார சபைக்கு முறைப்பாடு செய்வதற்கு சென்றபோதும் மின்சார சபையின் வாயிட் கதவு சங்கிலி போட்டு பூட்டப்பட்டுள்ளதாகவும் இப் பகுதி மக்கள் தமது அதிர்ப்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments