ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் கடற்படை கைப்பற்றிய மீன் பிடி படகு சட்ட நடவடிக்கைகளுகாக திக்கோவிட்ட துறைமுகத்திற்கு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் கடற்படை கைப்பற்றிய போதைப்பொருட்களுடன் ஆயுதங்களை கொண்டு சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு வியாழக்கிழமை (12) காலை 9.30 மணிக்கு கொண்டு வரப்பட்ட உள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது
ஆயுதங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை கொண்டு செல்லும் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகவே நிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments