Breaking News

மன்னார்-கரிசலில் புதிய இறை மாளிகை ! நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் பதியுதீன்

மன்னார் மாவட்டத்தின் கரிசல் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட் பதியுதீன் அவர்கள் (08) நேரில் சென்று பார்வையிட்டார்.


இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் அலாவுத்தீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஜப்ரான், உப தவிசாளர் புர்ஹான், பள்ளிவாசல் அதிபர் பழீல், இணைப்பாளர் முனவ்வர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


சமூக நலன் மற்றும் இறை சேவையை முதன்மையாகக் கொண்டு, இவ்வழகிய பள்ளிவாசல் மாளிகை சமூக செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் அலாவுத்தீன் அவர்களால் அவரது சொந்த நிதியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


“இத்தகைய மகத்தான பணிக்காக அல்-ஹாஜ் அலாவுத்தீன் அவர்களுக்கு இறை அருளும் நன்மைகளும் கிடைக்க வேண்டும். அவரின் இந்த நற்காரியத்தை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும். வடக்கு சமூகத்தின் சார்பாக எனது மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்தினார். 


(ஊடகப்பிரிவு)










No comments