Breaking News

புத்தளம் ரத்மல்யாய வை.எம்.எம்.ஏ. நகரில் சுதந்திர தின நிகழ்வுகள்.

எம்.யூ.எம்.சனூன்

"இலங்கை நாட்டை கட்டியெழுப்பு வோம்" எனும் தலைப்பின் கீழ் புத்தளம் ரத்மல்யாய வை.எம்.எம்.ஏ. நகரில் இயங்கும் அல்-இக்ரா மகளிர் அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


மகளிர் அமைப்பின் தலைவி பாத்திமா வஜீஹா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக வை.எம்.எம்.ஏ. பள்ளி நிர்வாகத்தின் செயலாளர் கே.சீ. முஹைமின் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஏ.அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் மகளிர் குழு உறுப்பினர்கள், ஊர் மக்கள் அனைவரும் இணைந்து சுதந்திர தினத்தை தேசிய பெருமையுடனும், தேசப்பற்றுடனும் கொண்டாடினர்.







No comments