Breaking News

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயதின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி வெள்ளிக்கிழமை (06) பாடசாலையின் அதிபர்  என்.பத்மானந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு அர்ஜுன கலந்து சிறப்பித்தார்.


இல்ல அலங்காரம், அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி போன்றன அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்த ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியே புத்தளம் கல்வி வலயத்தில் இவ்வருடம் இடம்பெற்ற முதலாவது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிஎன்பது குறிப்பிடத்தக்கது.









No comments