கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் வருடாந்த பெற்றோர் கூட்டமும் பரிசளிப்பு விழாவும்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் வருடாந்த பெற்றோர் கூட்டமும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (15) காலை கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம் ஏ பீ எம் முபாஸில் ( உஸ்மானி) தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது
அரபுக் கல்லூரியின் கல்வி முன்னேற்றம் ஒழுக்க மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்படுவதுடன் 2025 ம் ஆண்டில் சிறந்த பொதுக் கல்வி அரச கல்வி அடைவு மட்டம், திறன் அபிவிருத்தி மற்றும் பண்பாட்டு முன்னேற்றம் போன்ற சாதனை மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments