மாத்தளை அந்நஜாஹ் அரபுக் கல்லூரியின் காலஞ்சென்ற அதிபர் சைகுந்நஜாஹ் ஏ.எல்.முஹாஜிரீன் (நத்வி) காதிரி வர்ரிபாஇ அவர்களது இரண்டாவது வருட ஞாபகார்த்த வைபவம்.
எம்.யூ.எம்.சனூன்
மாத்தளை அந்நஜாஹ் அரபுக் கல்லூரியின் காலஞ்சென்ற அதிபர் சைகுந்நஜாஹ் ஏ.எல்.முஹாஜிரீன் (நத்வி) காதிரி வர்ரிபாஇ அவர்களது இரண்டாவது வருட ஞாபகார்த்த வைபவம் மற்றும் கத்தமுல் குர்ஆன் என்பன அண்மையில் கல்முனை தாருல் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
தாருல் சபா பணிப்பாளர் சபா முஹம்மது (நஜாஹி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அந்நஜாஹ்வின் பழைய மாணவர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்து கலந்து கொண்டனர்.
இதேவேளை அப்பகுதியைச் சேர்ந்த மத்ரஸா மாணவர்கள் மற்றும் முஹிபீன்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விஷேட உரையை கலகெதர ஜும்ஆ பள்ளி பேஷ் இமாம் மௌலவி ஏ. ஆர். இப்ராஹிம் ஸாஹிப் (நஜாஹி) மற்றும் குளியாபிட்டி டி.எம் . ரிஸான் (நஜாஹி) ஆகியோர் நிகழ்த்தினர்.










No comments