JobVibe.lk - Sri Lanka Job Portal

78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை நடாத்திய இரத்த தான திட்டங்கள்

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படை பல இரத்த தான திட்டங்களை ஏற்பாடு செய்தது. இதன்படி, திருகோணமலை புல்மோட்டை மருத்துவமனை மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை ஆகியவற்றில் இரத்த தான நிகழ்வுகள் 2026 பிப்ரவரி 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. 


அதன்படி, “க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் சமூக முயற்சிகளின் கீழ், 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு புல்மோட்டை அடிப்படை மருத்துவமனை மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்து கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையில் இந்த இரத்த தான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 


மேலும், கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் தாமாகவே முன்வந்து, இந்த உன்னத சமூக சேவையின் வெற்றிக்கு பங்களித்தனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال