JobVibe.lk - Sri Lanka Job Portal

வேட்டையாடச் சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கருவலகஸ்வெவ – பொரலுகந்த வனப்பகுதிக்குள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சென்ற ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த விபத்து வெள்ளிக்கிழமை (12) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ – முரியகுளம் பகுதியைச் சேர்ந்த வாசலா முதியன்செலாகே சாமிலகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இறந்தவரின் உடலுக்கு அருகில், எண் அழிக்கப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال