(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள நிஷாமுதீன் பள்ளிவாசலுக்கு வழிபாடாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு Water Dispenser இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் TOI அமைப்பின் அனுசரணையுடன், இணைப்பாளரும் சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசாரின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
