JobVibe.lk - Sri Lanka Job Portal

ஆனமடுவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவைத்துள்ளனர்.


யானை தாக்குதலுக்கு உள்ளானவர் ஆனமடுவ – சியம்பலாகஸ்ஹேன பாடசாலைக்கு பின்புறமுள்ள பகுதியில் வியாழக்கிழமை (2) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் ஆனமடுவ – சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த ஹெட்டிபதிரென்னஹெலகே நைதேஹமிகே ரம்பண்டா (வயது 66).


தனது கணவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக இறந்தவரின் மனைவி ஆனமடுவ காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


காட்டு யானை தாக்குதல்களால் ஆனமடுவ பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


சியம்பலாகஸ்ஹேன மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை அண்மித்த பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் சுற்றித் திரிவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.


கிராமங்களுக்குள் அத்துமீறும் இந்த காட்டு யானைகளை விரட்ட தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், முறையான வேலைத்திட்டம் இல்லாததால் இந்த முயற்சிகள் தோல்வியடைவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال