தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியீட்டு விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியீட்டு விழா இன்று (16) சனிக்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ் கார்டனில் இடம்பெறவுள்ளது.
அமையத்தின் தேசிய தலைவர் அகில இலங்கை சமாதான நீதவான் கலாநிதி ஏ.எல். அன்சார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தேசிய சமாதான நீதிபதி சபையினுடைய அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் இந்நிகழ்வில் எதிர்காலத் திட்டமிடல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படவுள்ளதோடு, சமூக சேவைக்காக நிதியம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments