கற்பிட்டி பத்தளங்குண்டு கடல் பகுதிக்கு அப்பால் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட உலர் இஞ்சி காலணிகளை கைப்பற்றிய கடற்படையினர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பத்தளங்குண்டு தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட இருந்த 91 கிலோ உலர்ந்த இஞ்சி மற்றும் 238 சோடி காலணிகள் கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையினால் கடத்தல்காரர்களினால் கடலில் கைவிடப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (03) கைப்பற்றியுள்ளனர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்ட விரோத நடவடிக்கைகள எதிர்த்து தீவை சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரைகளை உள்ளடக்கிய கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது
அதன்படி கற்பிட்டி பத்தளங்குண்டு கடல் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படையின் விரைவு நடவடிக்கை படை தலைமையகத்தால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறிப்பிட்ட கடல் பகுதியில் இருந்து ஐந்து சந்தேகத்துக்கிடமான பொதிகள் சோதனை செய்யப்பட்டதாகவும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினால் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட 91 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 238 சோடி காலணிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
No comments