திருகோணமலை கடற்படை, கடல்சார் அகாடமியின் புதிய தளபதியாக கொமாண்டர் தினேஷ் பண்டார பதவியேற்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 41 வது கட்டளை அதிகாரியாக கொமாண்டர் தினேஷ் பண்டார கடந்த புதன்கிழமை (02) பதவியேற்றார்.
கடற்படை மரபுப்படி புதிய தளபதி வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அகாடமியின் தளபதியாக பணியாற்றிய றியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி தளபதியின் கடமைகளை கொமாண்டர் தினேஷ் பண்டாரவிடம் ஒப்படைத்தார்.
கடமைகளை ஒப்படைத்ததை தொடர்ந்து கடற்படை மரபுகளின்படி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி யிலிருந்து றியர் அட்மிரல் ரோஹன் விடைபெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.
No comments