இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத உபகரணங்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 30 பேர் இரு வாரங்களில் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடந்த இரண்டு வாரங்களில்ஔ (2025 ஜூன் 09 முதல் ஜூன் 20 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய கடற்பரப்பில் மேற்கொண்ட தேடடுதல் நடவடிக்கைகள் வாயிலாக பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) தெப்பப் படகுகள் என்பவற்றையும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட முப்பது (30) உள்ளூர் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகள், இலங்கை கடலோர காவல்படை மற்றும் மீன்வள திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் குருநகர், திருகோணமலையில் உப்புரல், கும்புருப்பிட்டி, பொதுக்கட்டுவ மற்றும் நிலாவெளி, முல்லைத்தீவில் ஆலம்பில் மற்றும் நாயாறு, மட்டக்களப்பில் பாலமின்மடு மற்றும் புத்தளத்தில் புளியங்குடா குளம் ஆகிய கடற்கரைகள் மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொய்ட இந்த நடவடிக்கைகளில் 10 டிங்கி படகுகள், 02 தெப்பம் படகுகள் மற்றும் 14 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காகவும், கடலட்டைகளை பிடிக்க இரவில் சட்டவிரோதமாக டைவிங் செய்ததற்காகவும் 30 சந்தேக நபர்கள் இக்காலப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்கள், கடலட்டைகள் மற்றும் மீன்பிடி படகுகள் யாழ்ப்பாணம், திருகோணமலை, ஈச்சிலம்பட்டு, முல்லைத்தீவு, குச்சவெளி, மட்டக்களப்பு, மாமுனை வடக்கு மற்றும் கற்பிட்டி ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன. மேலும், நிலாவெளி பகுதியில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சர்தாபுர சிறப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
No comments