Breaking News

புழுதிவயல் பிக்டோ அஹதிய்யா பாடசாலை மாணவர்கள் 06 மாதங்களில் அபார வெற்றி பெற்று மகத்தான சாதனை.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் புழுதிவயலில் அமைந்துள்ள பிக்டோ அஹதிய்யா பாடசாலை, தனது குறுகிய கால பயணத்தில் ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளது. 


ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை, தனது முதல் பரீட்சை முடிவுகளிலேயே சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது.


2025 அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட அஹதிய்யா இடைநிலை சான்றிதழ் பரீட்சையில பிக்ஹ், அஹ்லாக் மற்றும் ஸீரா பாடங்களில்  மாணவர்கள் 100 வீதம்  சித்தியடைந்துள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றிய 38 மாணவர்களில் 15 மாணவர்கள் சகல பாடங்களிலும் 03 ஏ சித்தியையும்,11 மாணவர்கள் 02 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர். 


இந்த வெற்றி, அஹதிய்யா பாடசாலைக்கும் ,ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.


இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களேயான நிலையில், மாணவர்கள் இத்தகைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டமையானது வரலாற்று சாதனையாகும்.


கிடைக்கப்பெற்ற இந்த வெற்றியானது ஆசிரியர்களினதும் நிர்வாகத்தினதும் அர்ப்பணிப்பு, மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாகும் என தெரிவித்த அஹதிய்யா அதிபர் முஸ்அப் ஸாபிதி, எதிர்காலத்தில் மேலும் பல கல்விச் சாதனைகளை நிகழ்த்த எமது பாடசாலை உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இந்த மகத்தான வெற்றிக்குக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.




No comments